ஆவணங்களை தமிழில் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை அனுமதி : வக்கீல்கள் போராட்டம் வாபஸ் |
|
தினமலர்.காம்-மில் பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 ஆவணங்களை தமிழில் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை அனுமதி : வக்கீல்கள் போராட்டம் வாபஸ் "மதுரை : மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குகளை தாக்கல் செய்யும் போது, கூடுதல் ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தலைமை நீதிபதி யூசுப் இக்பால் உத்தரவிட்டார். இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை நீதிபதி உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் மனு செய்தனர். இதுகுறித்து நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் கொண்ட பெஞ்ச், தானாவே மனுவை வழக்காக கருதி, விசாரணைக்கு எடுத்தது. வக்கீல் சங்க நிர்வாகிகள், தமிழில் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதை ஏற்று கொண்ட பெஞ்ச், கூடுதல் ஆவணங்களை தமிழில் தாக்கல் செய்யலாம் என அனுமதி வழங்கியது. அதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த வக்கீல்கள் இன்று முதல் பணிக்கு திரும்புவதாக அறிவித்தனர்". எனது அனுபவத்தில் பேசுகிறேன்: இந்தியாவில், குறிப்பாக நமது தமிழகத்தில் சட்டப்படியான வகையில் நீதி கிடைப்பதற்கு மொழிமட்டுமே தடையாக இருப்பது இல்லை. நீதியின் விலை சாமானியன் கொடுக்கமுடிவதைவிட மிகவும் அதிகம் என்பதை ஒரு வழக்குரைஞரான நான் நன்கு உணர்ந்துள்ளேன். என்னுடைய அனுபவத்தில், எந்த ஒரு பாதிப்புக்குள்ளான நபரும் தன்னைவிட செல்வாக்குள்ள நபருக்கு எதிராக நீதி மன்றத்தின் மூலமாகவோ அல்லது காவல் துறை வாயிலாகவோ அவ்வளவு எளிதில் நீதி பெற்றுவிட முடியாது. சட்டத்தின் ஆட்சி என்பதும், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதும் நான் பார்த்த வரையில் ஒரு மாயை அல்லது ஒரு பொய்யான அயோக்கியன் சினிமாவில் யோக்கியன் வேஷம் போடுவதர்க்கு ஒப்பானதாகும். https://www.jeevaganadvocate.com/injustice.php |
|